:
Breaking News

மீண்டும் அமைச்சராகும் பொன்முடி?

top-news

சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பொன்முடி மீண்டும் எம்எல்ஏ-வாக தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *